Friday, April 19, 2024

தஞ்சை கடற்கரை கிராம மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ கோரிக்கை….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து 82 நாட்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டுமென தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில் தஞ்சை மாவட்ட கடற்கரை கிராம மீனவர்கள் கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை ஏற்று மீன்பிடிக்க 2020 மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல இயலவில்லை.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் 15-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்படி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்ந்து 82 நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை நாட்டு படகு, விசைப் படகு மற்றும் இழுவை படகு மீனவர்களுக்கு ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த மீனவர்களும் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மீனவ குடும்பங்களை காப்பாற்ற தமிழக அரசு உரிய நிவாரணம் மற்றும் மீன்படி தடைக்காலத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தஞ்சை தெற்கு மாவட்டக் கழக தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...