சென்னை, கோட்டையில் பறந்த
தேசியக் கொடியில், ஓட்டை விழுந்ததைத்
தொடர்ந்து, அந்தக் கொடி
அகற்றப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை
கொத்தளத்தில், மிகப்பெரிய
கொடிக்கம்பம் உள்ளது. இந்த
கொடிக் கம்பத்தில், தினமும் ராணுவ
வீரர்கள், காலையில், தேசியக் கொடியை
ஏற்றுவர்; மாலை இறக்குவர். வழக்கம் போல், நேற்று
(அக்.,20) காலை, தேசியக் கொடியை ஏற்றினர்.
காலை, 11:00 மணி அளவில், தேசியக்
கொடியின் பச்சை நிறத்தில், ஓட்டை இருப்பதை,
அவ்வழியே சென்றவர்கள் கண்டனர்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
பிற்பகல், 2:15 மணிக்கு, ராணுவ வீரர்கள், ஓட்டை
விழுந்த தேசியக் கொடியை கீழே இறக்கி, புதிய
தேசியக் கொடியை பறக்க விட்டனர். பட்டாசு
நெருப்பு காரணமாக, கொடியில்
ஓட்டை விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...





