சென்னை, கோட்டையில் பறந்த
தேசியக் கொடியில், ஓட்டை விழுந்ததைத்
தொடர்ந்து, அந்தக் கொடி
அகற்றப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை
கொத்தளத்தில், மிகப்பெரிய
கொடிக்கம்பம் உள்ளது. இந்த
கொடிக் கம்பத்தில், தினமும் ராணுவ
வீரர்கள், காலையில், தேசியக் கொடியை
ஏற்றுவர்; மாலை இறக்குவர். வழக்கம் போல், நேற்று
(அக்.,20) காலை, தேசியக் கொடியை ஏற்றினர்.
காலை, 11:00 மணி அளவில், தேசியக்
கொடியின் பச்சை நிறத்தில், ஓட்டை இருப்பதை,
அவ்வழியே சென்றவர்கள் கண்டனர்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
பிற்பகல், 2:15 மணிக்கு, ராணுவ வீரர்கள், ஓட்டை
விழுந்த தேசியக் கொடியை கீழே இறக்கி, புதிய
தேசியக் கொடியை பறக்க விட்டனர். பட்டாசு
நெருப்பு காரணமாக, கொடியில்
ஓட்டை விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
More like this
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...