கோரனா வைரஸ் முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக நமது ஊர் முழுவதும் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழுள்ளது, இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மூலம் சார் ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியை நீங்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.
மேலும் நாளை முதல் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தவர்கள் பால் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அதிரை ஜமாஅத்தார்கள் தத்தமது பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவது வரவேற்புக்குரியது.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் துணை நிற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
என். முகமது புகாரி
9942268351
மாவட்ட தலைவர்
SDPI கட்சி,
தஞ்சை தெற்கு