அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
இது குறித்து தெரிவித்த அவர் உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் மக்கள் பலியாகி வருகின்றனர்.
இதனை தடுக்கவே மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி உள்ளனர்.
இதனை புரிந்துகொள்ளாத சிலர் சர்வ சாதாரணமாக வீதிகளில் கட்டுபாடின்றி சுற்றி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க காவல்துறையினர் களத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சுற்றி வருவது ஏற்புடையது அல்ல என கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் நலன் கருதியே இந்த ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம் என்றும் கஷ்டமாக இருந்தாலும் பொறுமையை கையாண்டு கொடிய நோயை அகற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.