அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொது தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் என பலருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிரை காவல்நிலைய துணை ஆய்வாளர் ராஜூ, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சித்த வைத்தியர் அமீர் சுல்தான், பட்டிமன்ற பேச்சாளர் அன்னா சிங்காரவேலு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் மன்சூர் உள்ளிட்ட ரெட்கிராஸ் ஆயுட்கால உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக IRCS சேர்மன் மரைக்கா கே. இதீரிஸ் அஹமது அனைவரையும் வரவேற்றார்.