கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை கருத்தில்கொண்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்க அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றிட பொருளாதார உதவிகள் தேவைப்படுகிறது. எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்களால் இயன்ற நிதி உதவியை கீழ்க்காணும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.