Friday, April 19, 2024

கொரோனாவை வென்று வந்தாலும் பல ஆண்டுகள் கூடவே இருந்த குடியிருப்பு மக்களால் விரட்டியடிப்பு…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியவரை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் வசிக்கும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் பழனி அண்ணாநகர் பகுதியில் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கரூரில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் அப்பகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மருத்துவர்கள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அந்த நபர் ஊருக்குள் வர தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபரை பொதுமக்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...