தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊர்களில் கடைகள்,அத்தியவாசிய பொருட்கள் சார்ந்த கடைகள் இயங்கி வருகிறது.
ஆனால் இன்று காலை திடீரென்று மல்லிப்பட்டினத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து இருப்பதாக உத்தரவுகள் வந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து RDOவிடம் கேட்கையில் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும்,அரசின் உத்தரவை மீறி நான் எவ்வாறு உத்தரவு போட முடியும் என்றும் வினவினார்.மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அதனை வியாபாரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 முதல் பகல் 1 மணி வரை கடைகளை திறக்க அனுமதி இருக்கும் பட்சத்தில் இது போன்று திடீர் அறிவிப்பு வந்ததும் மல்லிப்பட்டினம் மக்கள் குழப்பத்தில் அச்சத்துடனும்,பீதீயிலும் உள்ளனர்.
அத்தியவாசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கேட்டுகொள்கிறொம்.அப்படி மீறும்பட்சத்தில் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.