Monday, January 20, 2025

தமிழகத்தில் 48 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் இன்னும் 48 மணிநேரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் அடையார் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தற்போது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவி அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது, சராசரி அளவில் மழை பெய்துள்ளது.

 

எதிர்பார்க்கப்பட்ட அளவை விட, கூடுதலாகவே தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது. வடகிழக்கு பருவமழையும் சரியான அளவில் இருந்தால் விவசாயிகளுக்கும், தண்ணீர் தேவைகளுக்கும் சமாளிக்க ஏதுவானதாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img