அதிரையில் கொரோனா தடுப்பு குழு நேரடி ஆய்வு.
அதிராம்பட்டினத்தில் இன்று தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு அரசின் அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் IAS சுகாதார துறை இணை இயக்குனர் மற்றும் கோட்டாசியர் வட்டாச்சியர் உள்ளிட்ட குழு இன்று அதிராம்பட்டினம் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதில் கிருமி நாசினிகள், தெளிக்கும் பணி பொதுமக்கள் கைகள் கழுவ செய்யப்பட்ட வசதிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள்,தன்னார்வலர்கள் பணி ஆகியவற்றை நேரடி ஆய்வு செய்து.
பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தூப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி சென்றனர்.