Wednesday, April 24, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அதிரை அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் கோரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து வெகுவாக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த (20-04-2020) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற அதிரை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில்,அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராம மக்களிடம் கொரோனா நோய் முஸ்லிம்களால் மட்டுமே பரவுகிறது என்ற தவறான எண்ணத்தை பரப்பியதன் விளைவாக அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய பால், காய்கறி போன்ற அத்தியவாசிய பொருட்களை எடுத்துவர கிராமத்தினர் அனுமதிக்காததை குறித்து பேசப்பட்டது.

அதிரைக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டை சுற்றி 50 மீட்டர் அளவிற்கு தடை செய்யப்படுவதால் அப்பாவி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாலும்,
எதிர் வரும் நோண்பு நாட்களில், அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட 6 மணி நேரத்தை காலை 8 மணியிலிருந்து 2மணிவரை என்பதை பயன்படுத்த முடியாது என்பதாலும் வட்டாச்சியர் அனுமதித்த அதிரையை சார்ந்த தன்னார்வர்கள் மூலம் பசும்பாலை அதிரைக்கு வந்துவிடவோ அல்லது அரசே முன்னின்று பாலை எடுத்துவந்து அதிரைக்கு தந்திடவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மழவேனிற்காடு செக் போஸ்டில் பக்குவமற்ற ஊர்காவல் படையை சார்ந்தவர்களைக் பணியமர்த்தாமல் காவல்துறையை சார்ந்த நபர்களை பணியில் அமர்த்த ஆவணம் செய்ய வேண்டும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைகளாக அனுப்பப்பட்டது.

இதில் அதிரையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகளை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...