Thursday, February 12, 2026

அதிரையில் தொடரும் திருட்டு !! இம்முறை ECR தவ்ஹீத் பள்ளி அருகில் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனர். மேலும், வீட்டு வாசலில்  நிறுத்தியுள்ள பைக்குகளை திருடுவது, கடைகளின் பூட்டை  உடைத்து பொருள்களை திருடிச் செல்வது என அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தவ்ஹீத் பள்ளி கிளை 1 அருகில் உள்ள ஹமீத் அவர்களின் வீட்டில் நேற்று இரவு வீட்டை பூட்டி சென்றனர். மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்தால் தலைவாசல் கதவை உடைத்து சென்று அறையில் உள்ள பீரோல் கதவை உடைத்து 20,000 ஆயிரம் ரூபாயை திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் நடக்கும் தொடர் திருட்டை தடுக்க காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். மேலும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...
spot_imgspot_imgspot_imgspot_img