Thursday, April 25, 2024

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களை பயன்படுத்த தடை… காவல்துறை அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி அட்டையின்படி பச்சை நிற அட்டையை திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும், ஊதா நிற அட்டையை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் மற்றும் ரோஸ் நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனுமதி அட்டையை நடந்து சென்று மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்த வேண்டும், வாகனங்களில் செல்ல கூடாது. மேலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் தவிர்க்க இயலாத கரணங்களாக இருந்தால் மட்டுமே வாகனங்களில் செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி அட்டையினை பெற்று பயன்படுத்த வேண்டும். எனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள வண்ண அனுமதி அட்டையினை நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வேண்டும் என மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...