தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும் குப்பைகள் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஏற்கனவே அதிரை முழுவதும் நோய் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற குப்பைகளால் சுகாதர சீர்கேடுகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அத்தெருவாசிகள் கவலை தெரிவித்தனர்.இந்த குப்பைகள உடனடியாக அப்புறப்படுத்த அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





