Home » சென்னையில் 5மணி நேரமாக மழை! மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது!

சென்னையில் 5மணி நேரமாக மழை! மன்னடியில் ஆறு போல் ஓடுகிறது!

by
0 comment

சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வருகிறது. இன்று இரவு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது. நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது.

திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த நான்கு மணி நேரமாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மன்னடி பகுதியில் சாலைகள் ஆறு போல் ஓடுகின்றன இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter