தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை உள்ளடக்கிய சேர்மன்வாடி,புதுமனைத்தெரு,செக்கடிப்பள்ளி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சாலைகள் குண்டுகுழியுமாக இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இந்த சாலை பல தெருப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் பகுதியாகும்.நான்கைந்து தெருக்களை சார்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள பிரதான சாலையாக பயன்படுத்துகின்றனர்.மேலும் சென்னை செல்வதற்கான பல ஆம்னி பஸ்களின் அலுவலகங்கள் இங்கு தான் செயல்படுகின்றன.அதனால் இந்த பகுதிகள் பரபரப்பாகவே காணப்படும்.இதற்கான நிரந்தர நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்தகாலங்களில் போடப்பட்ட சாலைகள் போல் அல்லாமல் உடனடியாக தரமான சாலையை இப்பகுதிகளில் உடனடியாக அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்???
More like this
மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025...
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...