Home » பாதிக்கப்பட்ட அனைவரும் குணம்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு !

பாதிக்கப்பட்ட அனைவரும் குணம்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு !

0 comment

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கடைசியாக புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். கடந்த 22ம் தேதி 65 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.

மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அதன்பின்னர் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை ஈரோடு படைத்துள்ளது.

தற்போது வரை கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா இல்லாத மாவட்டத்தின் வரிசையில் ஈரோடும் இணைந்துள்ளது. விரைவில் பல மாவட்டங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக இல்லை. குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter