Monday, January 20, 2025

கர்நாடகாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரெயில் இஞ்சினால் பரபரப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது வாடி ரெயில்வே நிலையம். நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் இந்த ரெயில் நிலையத்தை அடைந்தது. அந்த ரெயில் நிலையத்தில் டீசல் எஞ்சினில் இருந்து எலக்ட்ரிக் எஞ்சின் மாற்றும் பணி நடந்தது.

வாடி ரெயில் நிலையத்தில் இருந்து சோலாபூர் வரை அந்த எஞ்சின் சென்றது. அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் வாடி ரெயில் நிலையத்தை அடைந்தது. எஞ்சினில் இருந்து டிரைவர் இறங்கி சென்ற சிறிது நேரத்தில் எஞ்சின் ஓடத் தொடங்கியது.

ஆளில்லாமல் ரெயில் எஞ்சின் ஓடுவதை கண்ட டிரைவர், இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் அருகிலுள்ள மற்ற ரெயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, எதிரே வரும் மற்ற ரெயில்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கும்படி சிக்னல் கொடுத்தனர்.

ரெயில் எஞ்சின் நிற்காமல் ஓடியது. எஞ்சினை நிற்க வைப்பதற்காக ரெயில்வே ஊழியர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து வந்தார். சுமார் 13 கி.மீ. தூரம் ரெயில் எஞ்சின் நிற்காமல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், நல்வார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில்வே ஊழியர் போராடி எஞ்சினில் ஏறி நிறுத்தினார். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆனாலும், ஆளில்லாமல் எஞ்சின் ஓடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சும் விதமாக, ஆளில்லாமல் ஓடிய ரெயில் எஞ்சினை பைக்கில் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய ஊழியருக்கு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img