தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே புதுப்பட்டிணத்தில் திமுக சார்பில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.
இன்று(ஏப்.28) புதுப்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா தடுப்பில் முழுமூச்சாய் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு தேவையான அரிசி,மளிகை,காய்கறி போன்ற அத்தியவசிய பொருட்களை வழங்கினர்.இந்நிகழ்வில் சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம், புதுப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் அமீர் முகைதீன்,திமுக பிரதிநிதி சாகுல் ஹமீத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.