79
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே சேதுபவாசத்திரத்தில் அடையாளம் தெரியாத நபர் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
சத்திரம் மீனவர் காலணி சுடுகாட்டில் சுமார் 35 முதல் 45 மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.இன்று(ஏப்.29) சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலையா அல்லது கொலையா என்ற ரீதியில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.