அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் ஊடக சக்தியாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்வதை முகநூல் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும், இணையத்தை தினந்தோறும் பார்வையிட வருகைதரும் பார்வையாளர்களின் பதிவேடும் உணர்த்துகிறது.
மத்திய அரசின் பதிவுபெற்ற அதிரை எக்ஸ்பிரசில் மேலத்தெரு, பிலால் நகர், கடற்கரை தெரு, தரகர் தெரு, வாய்க்கால் தெரு, புதுத்தெரு, திலகர் தெரு, முத்தமாள் தெரு, நடுத்தெரு, புதுமனை தெரு, ஆஸ்பத்திரி தெரு, ஆகிய தெருக்களை சேர்ந்தவர்களும் புதுக்கோட்டை உள்ளூர், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, தொண்டி, செந்தலை, கூத்தாநல்லூர், கிருஸ்ணாஜிப்பட்டினம், அம்மாபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் பங்களிக்கின்றனர். விருப்பு வெறுப்பு இல்லாத நல்லுள்ளம் கொண்ட இவர்களால் தான் இறைவனின் அருளை கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் 13 ஆண்டுகளை கடந்து தற்போது 14ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இந்நிலையில் டி.வி சேனலாக அதிரை எக்ஸ்பிரஸ் மாற வேண்டும் என வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி விருப்பம் தெரிவித்துள்ளார்.