Home » டிச.6! அதிரையிலிருந்து 30 வேன்களில் தஞ்சை போராட்ட களத்திற்கு செல்ல முடிவு!

டிச.6! அதிரையிலிருந்து 30 வேன்களில் தஞ்சை போராட்ட களத்திற்கு செல்ல முடிவு!

by Admin
0 comment

அஸ்ஸலாமு அலைக்கும்

 

 

அதிரை தமுமுக பேரூர் நகர நிருவாக பொதுக்குழு இன்று சனிக்கிழமை மாலை (11/11/17)  தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் வீட்டில் நடைபெற்றது இதில் அதிரை தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை சாகுல் ஹமீது தலைமை வகித்தார் தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் pkt சேக் முகைதீன் மற்றும் தமுமுக மாவட்ட துணை செயலாளர் சேக்காதி மற்றும் தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாகா சலீம் ஆகியோர் முன்னிலையில் நகர நிருவாக பொதுக்குழு நடைபெற்றது இதில் வரும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்பு நாள் அன்று தஞ்சை ரயில் நிலையம் அருகில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்பாட்டத்தில் அதிரையில் இருந்து குறைந்தது 30 வேன்களில் மக்களை திரட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது இந்த பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட தமுமுக செயலாளர் சகோ.N.ஹீமாயூன் கபீர் மற்றும் தமுமுக திருச்சி மாவட்ட துணை செயலாளர் M.ஹீமாயூன் கபீர் ஆகியோர் பாபர் மசூதி பற்றிய உரை நிகழ்த்தினர்கள் பின்னர் நகர் கிளை பொருளாளர் யூசுப் நன்றிவுரையாற்றினார்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter