உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.
இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் இருந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்வரை பரவல் விகிதம் குறைந்தே காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது,இவர்களை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து பார்க்கையில் இவர்களுக்குள் கோயம்பேடு சந்தை தொடர்பு இருப்பது தெரியவந்தது, பிறகு இன்று(மே.2) மட்டும் கோயம்பேடு சந்தை தொடர்பின் மூலம் அரியலூர்,பெரம்பலூர்,கடலூர்,விழுப்புரம் போன்ற பகுதிகளில் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.
பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் மட்டும் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகளும்,சுகாதர துறையினரும் கூறுகின்றனர்.