Friday, April 19, 2024

இளைஞர்களை கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை…!

Share post:

Date:

- Advertisement -

ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்துக் கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையைக் கோவை காவல்துறை வழங்கியது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3வது முறையாக நாடு முழுதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாரத்தில் 7 நாட்கள் 7 வண்ணங்கள் வாகனங்களில் பூசப்பட்டு , மீண்டும் சாலைகளில் திரிவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கோவை, சூலூர் காவல்துறையினர் நேரக்கட்டுப்பாடான மதியம் 1 மணியைக் கடந்து சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களைப் பிடித்து, கும்மியடிக்க வைத்துள்ளனர். கும்மியடிக்கும் போது, விழித்திரு, விலகி இரு எனச் சொல்ல வைத்து, நூதன தண்டனையை காவல்துறையினர் வழங்கியுள்ளனர். 

இதனிடையே கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்த மார்ச் 25 முதல் நேற்று வரை 15,598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17,646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15,165 பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 35 லட்சத்து 88 ஆயிரத்து 700 அபராதம் பெறப்பட்டு உள்ளது. 

நன்றி: புதிய தலைமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...