கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தடை உத்தரவு காலத்தில் வெளியில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரை காவல்துறை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.