தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றிய சேர்மன் அமுதா செந்தில் தனது ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி அப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க தனது நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர் மற்றும் அமுதா துரை செந்தில் ஆகியோர் அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.
மேலும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் வரவழைத்து அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதிதாக வாங்கப்பட்ட கிருமி நாசினி மருந்து தெளிக்கும் உபகரணங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர். மற்றும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் மதுக்கூர் யூனியன் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.