அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் கொரோனா கண்டைன்மண்ட் பகுதி என்பதால் அப்பகுதியை முழுமையாக அடைத்தும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கொரோனா தொற்று கொண்டவர் அந்நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
ஆனால் அடைக்கப்பட்ட அப்பகுதியில் மெல்ல மெல்ல மக்கள் நடமாட்டம் தொடங்கி விட்டது.
ஆனால் இந்தியன் வங்கியில், சேவையை இதுவரையிலும் தொடங்க வில்லை வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரமழான் காலம் என்பதால் NRI அனுப்பும் தொகையினை எடுக்க பட்டுக்கோட்டை காசாங்காடு வங்கியின் சேவையை நாட வேண்டி உள்ளது என்றும், அதுவும் பல தடைகளை தாண்டி சென்றுவருவதாகவும் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சகத்தால் தற்போது வங்கி சேவைக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் ATM/ CDM சேவையையாவது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.