அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.
இந்த நிகழ்வில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முஹம்மது யஹ்யா, ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்றத் துனை தலைவரும், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளருமான இளங்கோ, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்… முருகேசன், நாகலட்சுமி மற்றும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.