Home » குடிபோதையில் ஆட்டம் போட்ட அதிரையர் – போதையை தெளியவைத்து பாதையை காட்டிய கிராமத்தினர் !

குடிபோதையில் ஆட்டம் போட்ட அதிரையர் – போதையை தெளியவைத்து பாதையை காட்டிய கிராமத்தினர் !

0 comment

கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதானமாக டாஸ்மாக் எனும் மதுக்கடைகளின் திறப்பும் அடங்கும்.

கண்டைன்மண்ட் பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இந்த மது கூடங்கள் நேற்று முதல் திறந்து விடப்பட்டது.
கண்டைன்மண்ட் ஜோன் என்பதால் அதிராம்பட்டினத்தில் மதுபான கடைகளை திறக்கப்படவில்லை.

இதனால் அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு, இரண்டாம்புலிக்காடு, முதல்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள மதுபான கூடங்களுக்கு அதிரை மது பிரியர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதன்படி பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுபான கூடத்தில் மது அருந்திய அதிரையர் ஒருவர் போதை தலைக்கேறி பாதை மறந்தார். இதனால் அக்கம் பக்கத்து வீடுகளுக்குள் நுழைந்து சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார்.

இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் மற்றும் அங்கிருந்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து போதையை தெளியவவைத்து பாதையை காட்டி அனுப்பினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter