Friday, April 19, 2024

தமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை…

Share post:

Date:

- Advertisement -



கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்தும் சில கடைகள் திறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு மே 18-க்கு முன்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், அடுத்ததாக மக்களுக்கான போக்குவரத்து, மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்திய மருத்துவர் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை  பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும்  என  முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம்”என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...