மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது, செய்யது முகமது, மர்ஹூம் நெய்னா பிள்ளை, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மச்சானும், சேட் என்கிற பி அமானுல்லா அவர்களின் சகோதரரும், முகமது செரிப் அவர்களின் மைத்துனரும், காய்கறிக்கடை சேக் பரீது, மர்ஹூம் நூருல் ஹசன் ஆகியோரின் மச்சானும், முகமது ஷக்கீல் அவர்களின் தாய் மாமாவும், எஸ். ஜெகபர் அலி அவர்களின் தகப்பனாருமாகிய பி செய்யது இப்ராஹீம் (வயது-47) அவர்கள் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-05-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.