அதிராம்பட்டினத்தில் எண்ணிலடங்கா வாட்ஸ்அப் குழுமங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த வாட்ஸ்அப் குழுமங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தனித்த முத்திரையை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் பதிக்கிறது.
இந்த குழுமத்தினர்கள் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி பயணித்து வருகின்றனர், குழுமத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிரையில் செய்திருக்கின்றனர்,தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவுவது,இரத்த தேவைகளை பூர்த்தி செய்வது,நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருடம் ரமலான் மாதத்தில் அதிரையில் சிரமத்தில் இருக்க கூடிய 85 குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவிகளை செய்தனர்.இதுபோன்று பல வாட்ஸ்அப் குழுமங்களும் பணிகளை செய்ய முன்வர வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த குழுமம் தூண்டுகிறது.