தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே நம்பிவயலில் முன்னால் சென்று கொன்டிருந்த கார் மீது டார்ஸ் லாரி மோதியதில் கார் பின்பக்கம் அப்பளமாக சேதம் அடைந்தது.
பட்டுக்கோட்டையிலிருந்து நம்பி வயல் நோக்கி வந்து கொண்டிருந்த காரை தொடர்ந்து ஜல்லி ஏற்றும் டார்ஸ் லாரி வந்து கொண்டிருந்தது. நம்பி வயல் மகாராஜாசமுத்தரம் ஆற்று பாலம் கடந்து லாரி வேகமாக செல்ல முயற்ச்சித்ததில் காரின் பின் பகுதியில் மோதியது இதில் கார் சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.