Home » டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..

டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..

by admin
0 comment

நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ்,திமுகவினர் விவாதங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அப்போது பதிலளிக்கும் போது கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி விவாதத்தை திசை திருப்பினார்,மேலும் அவர் பேசும்போது தரம் தாழ்ந்த கருத்துக்களை பேசினார்.கரு.நாகரஜன் வன்ம பேச்சை கேட்ட ஜோதிமணி அதிர்ச்சிக்குள்ளாகி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து பாதியிலே விவாதத்தில் இருந்து வெளியேறினார்,அதேப்போல திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் பாஜக துணைத்தலைவரின் பேச்சை கண்டித்து வெளியேறினார்.

இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி கரு.நாகராஜனுக்கு கண்டனங்களை காங்கிரஸ் தலைவர்கள்,திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.ஜோதிமணிக்கு ஆதரவாகவும் I STAND WITH JOTHIMANI என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter