Thursday, April 25, 2024

ஊரடங்கால் பப்ஜிக்கு அடிக்ட்டான சிறுவர்கள்! ஈரோட்டில் நடந்த சோகம்!

Share post:

Date:

- Advertisement -

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார்(16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சதீஸ்குமார் அவரது செல்போனில் பப்ஜி கேம்மினை ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சதீஸ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தைத் திடலில் உட்கார்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, சதீஸ்குமார் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...