Saturday, April 20, 2024

முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை விற்க ஒப்புக்கொண்டனர். இரண்டு கடை உரிமையாளர்கள் மட்டும் கூட்டமைப்பு நிர்ணயித்த விலையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

எனவே முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு மட்டும் விற்கும் கடைகளில் இறைச்சியை வாங்குமாறும் இது நமது ஊரின் கண்ணியம் சார்ந்த விஷயம் என்பதால் 700 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கடைகளில் ஆட்டு இறைச்சி வாங்க வேண்டாமென்று இன்று (22.5.2020) நடந்த அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரொனா தோற்றாள் ஊரடங்கு அமலில் இருப்பதால் நம்மால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியில் சென்று தொழுகையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.

மேலும் உலமா சபை வக்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகையை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு
அனைத்து மஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு, முத்துப்பேட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...