சவூதி வாழ் அதிரையர்களின் ஈத் மிலன் ஒன்றுகூடல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி Zoom செயலி வாயிலாக இன்று(26/05/2020) காலை 11.30 மணி அளவில் குர்ஆன் கிராத்துடன் துவங்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு அயடா மூத்த நிர்வாகி தாஜுதீன் வரவேற்புரை ஆற்றினார். ஹாஃபிழ் நெய்னா முகமது தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் பொறுப்பாளர்களும் ஜித்தா அயடாவின் பொறுப்பாளர்களும் ரமலானில் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக டாக்டர் அஜ்மல், தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் எப்படி நம்முடைய ஆரோக்கியத்தை பேணவேண்டும் என்பது குறித்தும் கொரோனா நோய் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக சகோதரர். ஆரிஃப் அப்துல் சலாம விசா, பாஸ்போர்ட்,விமான போக்குவரத்து சம்மந்தமாக தொடுத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இறுதியாக அயடாவின் முன்னாள் தலைவர் ஜனாப். ஹபீபுர் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் கலந்துகொண்டனர்.