அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீச தொடங்கியது.
இதனையடுத்து அய்வா சங்க இளைஞர்கள் அந்த குப்பைகளை தீவைத்து அழித்தனர். இதில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த மர கிளைகள், கீற்றுகள் உள்ளிட்டவைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளை அய்வா சங்கத்தின் செயலாளர் நூர்முகம்மது, ராஜீக் அஹமது, ஹத்தாஃப், ஜமால் முஹம்மது உள்ளிட்டவர்கள் செய்து முடித்தனர். இளைஞர்களின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.