தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள கோவில் சுவற்றை ஒட்டி அப்படியே வண்டியுடன் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அக்குப்பைகள் இருத்தினங்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் இருந்து அல்லப்படுவதாகவும் , இதனால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி அதிகளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைக்கு வந்தால் நோயை அங்கிருந்தே பெற்றுச்செல்லும் அபாயம் உள்ளதாக அப்பகுதினர் குற்றம் சாற்றியுள்ளனர்.
இக்குப்பையை தினமும் அள்ளி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...