தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள கோவில் சுவற்றை ஒட்டி அப்படியே வண்டியுடன் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அக்குப்பைகள் இருத்தினங்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் இருந்து அல்லப்படுவதாகவும் , இதனால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி அதிகளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைக்கு வந்தால் நோயை அங்கிருந்தே பெற்றுச்செல்லும் அபாயம் உள்ளதாக அப்பகுதினர் குற்றம் சாற்றியுள்ளனர்.
இக்குப்பையை தினமும் அள்ளி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.
அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...






