Home » அதிரையில் ஒரே கோரிக்கையில் மூன்று இடங்களில் PFI ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

அதிரையில் ஒரே கோரிக்கையில் மூன்று இடங்களில் PFI ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

by
0 comment

நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம் ; பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள் ; மத்திய அரசே ! உ.பி. மற்றும் டெல்லியில் உன் பாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து ! என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3 இடங்களில் தக்வா பள்ளி அருகிலும், ஈ.சி.ஆர் சாலை அருகிலும், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகிலும், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், நாம் தமிழர் கட்சியின் நகரத் தலைவர் ஜியாவுதீன், தமுமுக நகர தலைவர் சலீம், மஜக மாவட்ட துணை செயலாளர் சேக், மிஷ்கின் பள்ளி முன்னாள் நிர்வாகி அன்சர் கான், தரகர் தெரு இளைஞர் மன்ற முன்னாள் நிர்வாகி முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter