பிறந்த நாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கேக் கட் செய்தும் பார்ட்டி கொடுத்து பணம்களை செலவழித்து வருவார்கள். ஒரு சிலர் அந்நாள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து பைக் ரேஸ்களில் ஈடுபட்டு கொண்டாடி வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணாஜி பட்டினம் இளைஞர்கள் தனது பிறந்த நாளை சாலையோர மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம் இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் N. இம்ரான்கான் அவரது பிறந்த நாளான நேற்று (14/6/20) சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு 25 உணவு பொட்டணம் வழங்கியுள்ளார். ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் சிலருக்கு மத்தியில் தனது பிறந்தநாள் அன்று ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இந்த இளைஞருக்கு ஊர் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து பிராத்தனையும் செய்தனர்.