Friday, April 19, 2024

கொசுவைக் கொல்லும் கொசுவை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன் இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னிநா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, மூன்று கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
CRISPR/Cas9 என்ற மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கொசுவின் மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர். இவ்வாறு கொசுக்கள் உருவாக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதற்கு சற்றும் யூகிக்க முடியாத பதில் அவர்களிடம் உள்ளது.
இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் இதேபோல குறைபாடு உள்ளவையாக இருக்கும் என்றும் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தபடியாக, ஏடிஸ் கொசுக்களில் இந்த மரபணு மாற்றத்தைச் செய்யப்போவதாகவும் இதனால் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காமாலை மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...