தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது.
கீழே விழுந்த மின்கம்பி தீப்பிடித்தது இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்ததால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது,மேலும் மதிய நேரம் என்பதாலும் பொதுமக்கள் யாரும் மின்கம்பம் அருகே இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கஜா புயலின் போதே இந்த மின்கம்பிகளும்,மின் கம்பங்களும் சேதமடைந்து காணப்பட்டன, அதனை புதியதாக மாற்றாமல் அதே மின்கம்பிகளையே சீர் செய்தனர், இதுகுறித்து ஏற்கனவே பல முறை மின்வாரியத்திடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் மல்லிப்பட்டிணம் பகுதியில் உள்ள மின்கம்பிகள்,கம்பங்களை மாற்றி அமைத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.