Home » பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

by admin
0 comment

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 30க்கும், டீசல் ரூ 25க்கும் விற்பனை செய்யும் வகையில், மத்திய அரசு எரிபொருள் விற்பனை கொள்கையை திருத்தி அமைக்க வேண்டும். அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் து.பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி ஏ.எஸ்.முருகேசன், விதொச ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பழனியப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter