தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று (ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை நகரத்தலைவர் K.முஹம்மது யாசிக் தலைமையேற்றார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் A.T.அப்துல்லாஹ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது அவர்கள் கட்சியின் சிவப்பு, பச்சை நட்சத்திரம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.
இறுதியாக நன்றிவுரை அந்தோனி அவர்கள் ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் SDTU முன்னால் தலைவர் அமானுல்லாஹ், நகரச்செயலாளர் A.சேக் மற்றும் செயல்வீரர்கள் உடனிருந்தனர்