Saturday, April 20, 2024

பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

Share post:

Date:

- Advertisement -

பேராவூரணி, ஜூன்.21-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75 அடி நீளத்தில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் கிழக்கு பகுதியில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து,பயிறு,எள்,கரும்பு, நெல்,தென்னங்கன்றுகள் வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டது.இதனால் ரூ.50 லட்சம் நாசமடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட இடத்தை பைங்கால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் மா.பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார்,பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,200 கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி உடைப்பை அடைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...