Home » மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மூடிட நண்பர்கள் குழுவினர் வேண்டுகோள்

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மூடிட நண்பர்கள் குழுவினர் வேண்டுகோள்

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மாலை நேரங்களில் மூடிட நண்பர்குழுவினர் வேண்டுகோள்.

கொரோனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில், அதே போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானவர்கள் மாலை நேரங்களில் வந்து செல்கின்றனர், இதில்  சென்னை பதிவெண் கொண்ட கார்கள் அதிகமாக உலா வருவது மல்லிப்பட்டிணம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும்,  துறைமுகத்தை மாலை நேரங்களில் மூடிட வேண்டும் என்றும் இதனால் நோய் பரவல் அச்சம் தவிர்க்கப்படும் என்றும்,கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter