மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனையாக இந்த திட்டம் தற்போது தலைமை செயலகத்தில் அமல்படுத்த பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச்.18ம் தேதி மகாராஷ்டிர புத்தாண்டு தினமான அன்று, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் தடை அமல் செய்யப்படும். தடையை மீறும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்என்றும், அதேநேரம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி, கல்லூரிகளில் இனி பிளாஸ்டிக் பாட்டில் அனுமதி இல்லை
433
previous post