Friday, March 29, 2024

அதிரையில் PFI சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.
2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது.

இவ்வாண்டு ஐநா பொது சேவை நாளில் உலகெங்கிலும் கோவிட் -19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளில் பணியாற்றிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை நினைத்து போற்றுவோம் என்று ஐக்கியநாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.

இதை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பொதுசேவை தினம் கொண்டாடப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் பட்டுக்கோட்டை வட்டாச்சியர் திரு.அருள் பிரகாசம்,
அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.பழனிவேல், காவல் ஆய்வாளர் திரு.ஜெயமோகன், வருவாய் ஆய்வாளர்கள் திரு.உமர், திரு.சரவணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் திரு.ரஞ்சித், மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டார சுகாதார ஆய்வாளர் திரு.அண்ணாதுரை, அதிரை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.அன்பரசன், அதிரை கிராம நிர்வாக அலுவலர் திரு.அஜாருதீன் ஆகியோரின் விலைமதிப்பற்ற சேவையை பாராட்டும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன், மற்றும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் Z.முஹம்மது தம்பி ஆகியோர் பொதுசேவை தின நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி கவுரவித்தனர்.

இவர்களின் சேவைகள் தொடர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்டின் அதிரை நகர தலைவர் S.முஹம்மது ஜாவித் அவர்களும் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...