Home » கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி…

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி…

by
0 comment

கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்பட வில்லை இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சியின் பார்வைக்கு கொண்டும் சென்றும் பலனில்லை.

அள்ளப்படாத குப்பையினால், அப்பகுதி முழுவதும் கொசுத் தொல்லையால் அவதிபடுகிறார்கள் என்றும் இப்பகுதிக்கு வெளி பகுதியில் இருந்தும் அதிகளவில் குப்பை கொட்ட வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் இது விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தவறும் பட்சத்தில் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் வீதியில் இறங்கி போராட உள்ளதாக அப்பகுதி தன்னார்வ அமைப்பான அய்வா தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter